சீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம்
தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது.
அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது.
இது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம்.
லியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க 15 பில்லியன் யுவான்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளை சீன மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்ந்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மையத்தை உருவாக்குவதன் மூலம் 2012 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் ஒட்டு மொத்த மென்பொருள் ஏற்றுமதியை 3.5 பில்லியன் டாலர்களாக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இது தற்போது செய்யப்படும் ஏற்றுமதியைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.
மென்பொருள் மையமாக உருவாக்கப்படவுள்ள இந்த துணை நகரத்தில் உண்மையில் அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவையும் இடம்பெறும் என்று இந்த கட்டுமானப் பணிக்கு முதலீடு செய்து வரும் ஹாங்காங் நிறுவனமான ஷூய் ஒன் குழுமத் தலைவர் வின்சென்ட் லோ தெரிவித்தார்.
தரைத் தளப் பரப்பளவு மட்டும் 4 மில்லியன் சதுர மீட்டர்கள் கொண்ட இந்த கட்டுமானப்பணி முடிய 7 முதல் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிகிறது.
முதல் கட்ட நடவடிக்கைகள் ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையவுள்ளது. ஆனால் முக்கிய இலக்கு ஐ.பி.எம் மற்றும் ஆரக்கிள் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளை மேம்படுத்துவதாய் இருக்கும் என்று தெரிகிறது.
வடகிழக்கு ஆசியாவிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஏற்றுமதி மையமாக இந்த டாலியான் மையம் திகழும் என்று சீன தகவல் தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், டாலியான் நகரில் 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் வேஃபர் ஃபேப்ரிகேஷன் மையம் (Wafer Fabrications Facility) ஒன்றை கட்டுவதற்கான பணியை ஏற்கனவே துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாலியானில் சத்யம் நிறுவனத்திற்கு ஏற்கனவே மையம் உள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் ஒரு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் சவாலை சமாளிக்க சீனா வரிந்து கட்டி களமிறங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.
வியாழன், 28 ஜனவரி, 2010
வெள்ளி, 15 ஜனவரி, 2010
அமெரிக்காவில் தமிழர் திருநாள்
தமிழன் செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெற்றவன்.தமிழனின் பண்பாடும்,கலாச்சாரமும்,மரபு வழிப்பிணைப்புகளும்,மொழியுணர்வும் பாராட்டுதலுக்குரியது.இன்று தமிழனின் இருப்புணர்த்தும் திருநாட்கள் அவனிருக்கும் இடங்களில் எல்லாம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுவது நாமெல்லாம் அறிந்ததே!.நாகரீகத்தொட்டிலான அமெரிக்காவில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் குறித்து நான் செய்தி ஏடுகளில் அறிந்தது தவிர வேறில்லை. இன்று அன்பு நிறை நண்பர் திருவாளர் சோம.இளங்கோவன் அவர்கள் அமெரிக்காவில் தமிழர் திருநாளை நேரடி வர்ணனை போல் நமக்கு அறியப்படுத்தும் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார்.இப்படி ஒரு அழகான கட்டுரை கிடைக்கப்பெற்றது, அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு வெளிப்பாடாக இந்தக்கட்டுரை அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது.நான் அறிந்ததை வலை நண்பர்களுக்கும் அறியத்தரும் ஆவலில் தான் இந்தக்கட்டுரை என் வலைப்பூவில் இடம் பெறுகிறது. நன்றி அன்பு நண்பரே!
தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்களைத் தமிழ்மணத்தில் படிக்கின்றேன். அந்தமான் தமிழ்ச் சங்கப் பொங்கல் பற்றி எழுதியிருந்தீர்கள்.படித்து மகிழ்ந்தோம். அமெரிக்காவில் பொங்கல் பற்றி நான் எழுதியதை அனுப்புகிறேன் ,பாருங்கள்.
அன்புநிறை,
சோம.இளங்கோவன்.
அமெரிக்காவிலே பொங்கலோ பொங்கல்.
அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆண்டுதோரும் பொங்கல் கொண்டாடுவோம் !
அது தமிழ்நாட்டுப் பொங்கலிலிருந்து பல விதங்களில் மாறு பட்டு இருக்கும்.
அமெரிக்க வாழ்க்கையே சனி,ஞாயிறு களில் தான் .வேலை நாட்களில் அவரவர் வேலைக்குச் சென்று வந்து சேருவதே பெரிய சாதனை ஆகி விடுவதால் கொண்டாட்டங்கள் பலவும் சனி,ஞாயிறுகளில் தான்.
பொங்கலன்று பெரும் பாலும் அவரவர் வீடுகளிலே பொங்கல் செய்து கொண்டாடி, தொலை பேசியிலே,இப்போதெல்லாம் மின்னஞ்சலில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடி விடுவார்கள். முழுப் பொங்கல் கொண்டாட்டமே ஆங்காங்கே தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாக்களில் தான்! அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள் இல்லாத பெரு நகரங்களே இல்லை என்ற அளவிற்குப் பல மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களில் எல்லாம் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. முதன் முதலில் நியூ யார்க் நகரத்திலே அறுபதுகளிலே ஆரம்பிக்கப் பட்டது.தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. பல தமிழ்ச் சங்கங்கள் இணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கி ஆண்டு தோறும் சூலை 4ந்தேதி வரும் மூன்று நாட்கள் விடுமுறையில் பெருஞ்சிறப்பாகத் தமிழ் மாநாடு நடக்கும்.
ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் சிறப்பாகப் பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு பெரும்பான்மைத் தமிழ்ச் சங்கங்கள் சனவரி 23 ஆம் நாள் கொண்டாடுகிறார்கள். குடும்பங்களாக வந்து பங்கேற்பார்கள். பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும்.ஆங்காங்கே உள்ள திறமைகள் பல விதங்களில் வெளிப்படுத்தப் படும்.மகளிர்,குழந்தைகள் பங்கேற்கும் பல ஆட்ட பாட்டங்கள்,கோலாட்டங்கள்,கும்மிகள்,நடனங்கள் என்று பல நிகழ்ச்சிகள்
நடக்கும். திருக்குறள் போட்டிகள் நடக்கும்.தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கே இருப்பதால் போட்டிகள் நிறைய இருக்கும்.பங்கேற்பும் பல நிகழ்ச்சிகளில் இருக்கும்.இப்போதெல்லாம் குழந்தைகள் அவர்களாகவே நிகழ்ச்சிகள் ,நாடகங்கள் என்று தமிழிலேயே வியக்கத் தக்கும் படி செய்வது மனமகிழ்ச்சியைத் தரும்.
பட்டி மன்றங்கள் பல இனிய நகைச்சுவை கலந்து நடக்கும்.இந்த ஆண்டு சிகாகோ தமிழ்ச் சங்கப் பட்டி மன்றத்தின் தலைப்பு " இன்பம் பொங்குவது இருபதுகளிலா ,அறுபதுகளிலா?". கவியரங்களில் ஆண்களும் பெண்களும்
வெளுத்து வாங்கு வார்கள். ஒரு முறை நாரதர் பிரம்மாவிடம் சென்னையிலே தமிழ் சினிமா நடிகர்கள் கடவுளை விடச் சிறப்பாகப் பல இளம் நடிகைகளுடன் நடனமாடி வாழும் அருமையைச் சொல்கிறார்.அதை அனுபவிக்க வந்த பிரம்மா கோடம்பாக்கத்தில் படும் இன்னல்களை அற்புதமாக நடித்திருந்தார்கள்.
பொங்கலும், உணவும் சிறப்பாக இருக்கும். பல இடங்களில் புதுச் செயற்குழுக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் நடத்தும் முதல் நிகழ்ச்சியாக இருக்கும்.ஆகவே திறமைகளின் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும். முன்பெல்லாம் சில பொருள்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். இப்போது அம்மா,அப்பா தவிர இங்கு எங்களுக்கு எல்லாம் கிடைத்து விடுகிறதால் நாங்கள் வெளி நாட்டில் இருக்கும் உணர்வே இல்லாமல் அமெரிக்கத் தமிழ்நாட்டில் தமிழர்களாக இருந்து மகிழும் நாளாகப் பொங்கல் விழாக்கள் மனது நிறைந்து வீடு திரும்புவோம். பல நகரங்களில் கடுங்குளிராக இருக்கும்,கொட்டும் பனியும் இருக்கும்.
இருந்தாலும் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்கி பொங்கலோ பொங்கல் அமெரிக்காவில் தமிழரின் இனிய விழாவாக இருக்கும்.
தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்களைத் தமிழ்மணத்தில் படிக்கின்றேன். அந்தமான் தமிழ்ச் சங்கப் பொங்கல் பற்றி எழுதியிருந்தீர்கள்.படித்து மகிழ்ந்தோம். அமெரிக்காவில் பொங்கல் பற்றி நான் எழுதியதை அனுப்புகிறேன் ,பாருங்கள்.
அன்புநிறை,
சோம.இளங்கோவன்.
அமெரிக்காவிலே பொங்கலோ பொங்கல்.
அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆண்டுதோரும் பொங்கல் கொண்டாடுவோம் !
அது தமிழ்நாட்டுப் பொங்கலிலிருந்து பல விதங்களில் மாறு பட்டு இருக்கும்.
அமெரிக்க வாழ்க்கையே சனி,ஞாயிறு களில் தான் .வேலை நாட்களில் அவரவர் வேலைக்குச் சென்று வந்து சேருவதே பெரிய சாதனை ஆகி விடுவதால் கொண்டாட்டங்கள் பலவும் சனி,ஞாயிறுகளில் தான்.
பொங்கலன்று பெரும் பாலும் அவரவர் வீடுகளிலே பொங்கல் செய்து கொண்டாடி, தொலை பேசியிலே,இப்போதெல்லாம் மின்னஞ்சலில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடி விடுவார்கள். முழுப் பொங்கல் கொண்டாட்டமே ஆங்காங்கே தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாக்களில் தான்! அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள் இல்லாத பெரு நகரங்களே இல்லை என்ற அளவிற்குப் பல மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களில் எல்லாம் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. முதன் முதலில் நியூ யார்க் நகரத்திலே அறுபதுகளிலே ஆரம்பிக்கப் பட்டது.தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. பல தமிழ்ச் சங்கங்கள் இணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கி ஆண்டு தோறும் சூலை 4ந்தேதி வரும் மூன்று நாட்கள் விடுமுறையில் பெருஞ்சிறப்பாகத் தமிழ் மாநாடு நடக்கும்.
ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் சிறப்பாகப் பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு பெரும்பான்மைத் தமிழ்ச் சங்கங்கள் சனவரி 23 ஆம் நாள் கொண்டாடுகிறார்கள். குடும்பங்களாக வந்து பங்கேற்பார்கள். பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும்.ஆங்காங்கே உள்ள திறமைகள் பல விதங்களில் வெளிப்படுத்தப் படும்.மகளிர்,குழந்தைகள் பங்கேற்கும் பல ஆட்ட பாட்டங்கள்,கோலாட்டங்கள்,கும்மிகள்,நடனங்கள் என்று பல நிகழ்ச்சிகள்
நடக்கும். திருக்குறள் போட்டிகள் நடக்கும்.தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கே இருப்பதால் போட்டிகள் நிறைய இருக்கும்.பங்கேற்பும் பல நிகழ்ச்சிகளில் இருக்கும்.இப்போதெல்லாம் குழந்தைகள் அவர்களாகவே நிகழ்ச்சிகள் ,நாடகங்கள் என்று தமிழிலேயே வியக்கத் தக்கும் படி செய்வது மனமகிழ்ச்சியைத் தரும்.
பட்டி மன்றங்கள் பல இனிய நகைச்சுவை கலந்து நடக்கும்.இந்த ஆண்டு சிகாகோ தமிழ்ச் சங்கப் பட்டி மன்றத்தின் தலைப்பு " இன்பம் பொங்குவது இருபதுகளிலா ,அறுபதுகளிலா?". கவியரங்களில் ஆண்களும் பெண்களும்
வெளுத்து வாங்கு வார்கள். ஒரு முறை நாரதர் பிரம்மாவிடம் சென்னையிலே தமிழ் சினிமா நடிகர்கள் கடவுளை விடச் சிறப்பாகப் பல இளம் நடிகைகளுடன் நடனமாடி வாழும் அருமையைச் சொல்கிறார்.அதை அனுபவிக்க வந்த பிரம்மா கோடம்பாக்கத்தில் படும் இன்னல்களை அற்புதமாக நடித்திருந்தார்கள்.
பொங்கலும், உணவும் சிறப்பாக இருக்கும். பல இடங்களில் புதுச் செயற்குழுக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் நடத்தும் முதல் நிகழ்ச்சியாக இருக்கும்.ஆகவே திறமைகளின் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும். முன்பெல்லாம் சில பொருள்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். இப்போது அம்மா,அப்பா தவிர இங்கு எங்களுக்கு எல்லாம் கிடைத்து விடுகிறதால் நாங்கள் வெளி நாட்டில் இருக்கும் உணர்வே இல்லாமல் அமெரிக்கத் தமிழ்நாட்டில் தமிழர்களாக இருந்து மகிழும் நாளாகப் பொங்கல் விழாக்கள் மனது நிறைந்து வீடு திரும்புவோம். பல நகரங்களில் கடுங்குளிராக இருக்கும்,கொட்டும் பனியும் இருக்கும்.
இருந்தாலும் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்கி பொங்கலோ பொங்கல் அமெரிக்காவில் தமிழரின் இனிய விழாவாக இருக்கும்.
அந்தமான் தமிழோசை ஆழி பேரலை
அந்தமானில் எங்களுக்கு அண்டை மாநிலங்கள் அடுத்த வீட்டில்.கற்காலத்திற்கும் தற்காலத்திற்கும் சில காத தூரம் தான். தமிழன்பர்களே! என்ன உளறல் என்கிறீர்களா? எங்களுக்கு அடுத்த வீட்டில் ஒரு மலையாளி அல்லது ஒரு வங்காளி அல்லது ஒரு தெலுங்கர் அல்லது ஒரு கன்னடியர் என்று அனைத்து மாநில மக்களுடன் இணக்கமாக இருந்து வருகிறோம். அந்தமான் ஒரு குட்டி இந்தியா.கற்காலத்தினின்று இன்னும் வெளிவராத, உடை பற்றிய எண்ணம் கூட இல்லாத, ஜரவா என்ற பழங்குடியினர் இங்கு வசிக்கின்றனர். இன்னும் பல பழங்குடியினர் இங்கு வசித்தாலும் அவர்கள் நம்மைப் போல நாகரீக மனிதர்களாய் வலம் வர இந்த ஒரு இனம் மட்டுமே நிர்வாணமாகக் காடுகளில் வசிக்கின்றனர்.இது பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் பதிவு செய்வோம். இப்போது தலைப்பிற்கு வருவோம்.
தமிழர்களைப் பொறுத்தவரை வயதானதும் தங்கள் கடைசி காலத்தை தமிழகத்தில் கழிக்க விரும்பி மீண்டும் தமிழகம் திரும்புவதையே விரும்புகிறார்கள்.அந்தமானில் பல பண்பாடு, பழக்க, வழக்கங்கள் கொண்ட மக்கள் இருந்தாலும் தங்களது தாய்த்தமிழ் நாட்டின் பண்பாடு, பழக்கவழக்கங்களில் மாற்றமின்றி அவரவர் பின்பற்றுகின்றனர். தமிழர்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். இங்கு வெற்றிமலை முருகன் கோவில்,கணபதி,ஆஞ்சனேயர்,சமயபுர மாரியம்மன், பாகம்பிரியாள், முனீஸ்வரர்,காளி,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்று அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் வசதிக்கேற்ப கோவில்கள் அமைத்து, திருவிழாக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நிறையத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் தமது முன்னோர்களின் பூர்வீகம் தெரியாது.சொந்த ஊர் மறந்து, சாதி அறியாது, தமிழ் மொழி மறந்து இந்த மண்ணின் மைந்தர்களாக வாழும் தமிழர்களும் உண்டு. இங்குள்ள தமிழர்கள் சாதியின், இனத்தின் அடிப்படையில் பிரிந்து நிற்பதோ, சாதிகளைச்சொல்லி சண்டையிடுவதோ கிடையாது.இங்குள்ள தமிழர்களின் அடையாளம் தமிழ். இங்கு தமிழர்களிடையே ஏற்ற, தாழ்வு எண்ணங்களும் இல்லை.
உணவுப் பழக்கம் என்று எடுத்துக்கொண்டால் சப்பாத்தி, உருளைக்கிழங்கு கறி வட இந்தியர்களைப்போல பெரும்பான்மையான தமிழர்களின் அன்றாட உணவுப்பட்டியலில் உண்டு. இங்கு மீன் அதிகம் கிடைப்பதால் மீன் அதிகம் உட்கொள்கின்றனர்.உணவுப்பஞ்சம் இங்கு கிடையாது.இங்கு எந்தப் பொருளும் உற்பத்தி கிடையாது என்றாலும் கூட நமது தமிழ் வணிகப்பெருமக்கள் முக்கிய பூமியினின்று அனைத்துப் பொருட்களையும் தருவித்து மலையெனக்குவித்து விடுவார்கள்.மற்ற மாநில மக்களும் வசிப்பதால் அவரவர் சொந்த மாநிலங்களில் கிடைக்கும் பொருட்களையும் தருவிப்பதால் இங்கு காசைக்கொடுத்தால் கிடைக்காத பொருளே இல்லை எனலாம்.இங்கு தனிமனித வருமானம் ஒரளவு அதிகம் என்பதால் வறுமை மிகக் குறைவு.வந்தாரை வாழவைப்பது தமிழகத்தின் தன்மையென்றால் வந்தாரையெல்லாம் வளமுடன் வாழ வைப்பது இந்த அந்தமான் தீவு.உழைப்பாளிகளின் சொர்க்கபூமி இந்த ஸ்வர்ண பூமி.
எல்லோரும் தாய்த்தமிழ் நாட்டை விட்டு தொலைவில் இருப்பதால் எல்லா மக்களுடனும் மனித நேயத்துடன், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குறிப்பறிந்து உதவும் பண்பாடு அதிகம் உண்டு. பண உதவிகள், கடனுதவிகள் சுலபமாகப் பெறமுடியும். நாணயமற்ற செய்கைகளை தமிழர்கள் மன்னித்துவிடுவார்கள். ஆனால் அடுத்த முறை தலை கீழாக நின்றாலும் உதவி பெற முடியாது. ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் நம் தமிழகத்தில் இருந்து தாய் மாமன் வருவதற்குள் அந்தக் குழந்தை எத்தனை பேரை மாமா என்று அழைக்கிறதோ அத்தனை பேரும் மாமன் சீர் கொண்டு வருவார்கள். அண்டை மாநில நண்பர்கள் அவர்கள் பழக்கப்படி நம் குழந்தைகளை சீராட்டுவார்கள். இங்கு தமிழ் மக்களிடையே கலப்பு மணம், காதல் மணம் பரவலாகக் காணப்படுகிறது. சீர் வரிசைகள்,மணமக்களுக்கு திருமண சடங்குகள், மணமக்களுக்கு விருந்து உபசாரங்கள் எல்லாம் தமிழகத்தைப் போலவே இங்கும் உண்டு. ஆனால் திருமணத்தை அவரவர் விருப்பப்படி கோவிலிலோ,வீட்டிலோ முடித்துகொண்டு வரவேற்பு வைபவத்தை மண்டபத்தில் வைப்பர். சிலர் முக்கிய பூமியில் திருமணம் முடித்து இங்கு வந்து வரவேற்பு நடத்துவர். நம் ஊரைப்போல இங்கு வாழை இலை போட்டு விருந்து வைப்பதில்லை.ஒரு புலவு சாதம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மசாலா குழம்பு வகைகள் (சைவம்/அசைவம் அவரவர் வசதிப்படி) கீர் (அரிசி,பால்,சீனி,முந்திரி,திராட்சை கலந்து குழைய வேகவைத்து நம் ஊர் பாயாசம் போன்றது) வைத்திருப்பார்கள்.தட்டுகள் அடுக்கி இருக்கும்.மண்மக்கள் கைகளில் பரிசு அல்லது பண முடிப்பைக் கொடுத்துவிட்டு சாப்பாடு பரிமாறும் இடம் வந்து நாமே தட்டு எடுத்து வேண்டும் அளவு உணவு பெற்று உண்டு களிக்க வேண்டியது தான்(!) இங்கு கேள்விப்பட்ட அளவு வரதட்சணைக் கொடுமை கிடையாது.
சென்னையில் பேசுவது தமிங்கிலிஷ் என்றால் இங்கு பெரும்பாலான தமிழர்கள் தமிந்தி (தமிழோடு இந்தி கலந்து) பேசுவார்கள். சிலர் இந்தி மட்டுமே பேசுவதும் உண்டு. இதில் பெருமை அடையும் தமிழர்களும் உண்டு என்பது தான் தமிழ் பற்றுக் கொண்டோர்களின் வருத்தமும் கூட.அந்தமான் தமிழர் சங்கத்தில் எந்த விழாவாக இருந்தாலும் சரி,தமிழர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெறும் பெருமக்கள் வலியுறுத்துவது வீட்டில், தமிழர்களுடன் கலந்துரையாடும் போது தமிழில் அளவளாவுங்கள் என்பதைத்தான்.
பண்டிகைகள் என்று எடுத்துகொண்டால் நமது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளோடு வட இந்தியரின் துர்க்கா பூஜை (நவராத்ரி),ஹோலி பண்டிகை,ராக்கி(சகோதரர்களின் நலம் வேண்டி அவர்களின் கையில் ரட்சை கட்டுவது) ஆகியவற்றைக் கொண்டாடுகிறார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ் நாட்டின் அதே உவகையோடு கொண்டாடுவோம். இங்கு வயல் வரப்பு, தோட்டம் துரவு, மாடு,கன்று,ஆடு,கோழி வளர்க்கும் தமிழ் விவசாயக்குடும்பங்கள் நிறைய உண்டு. அவர்கள் மாட்டுப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவர். நண்பர்களுக்கும் அழைப்பு உண்டு.தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா கொண்டாடுவோம். முக்கிய பூமியினின்று பேச்சாளர் பெருமக்களை அழைத்து வந்து விழாவிற்கு சிறப்பு சேர்ப்பர் சங்க நிர்வாகிகள்.
உடை அலங்காரத்தைப் பொறுத்தவரை பெண்கள் பெரும்பாலும் தமிழகத்தைப்போலவே சேலை,சுடிதார்,சல்வார் தான். மிகச்சிலர் மேனாட்டு உடைகள் அணிவதுண்டு. பெரும்பாலும் விமர்சிப்பது கிடையாது. இங்கு தமிழ்ப் பெண்கள் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர். நல்ல ஆடை அலங்காரத்தை விரும்புகின்றனர். பல வகை மக்களுடன் வசிப்பதால் அடுத்தவர்களிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்களை,உணவு முதல் நடை, உடை, பாவனை,இசை, வீட்டுப்பராமரிப்பு,குழந்தை வளர்ப்பு வரை சுலபமாக எடுத்துக்கொள்கின்றனர்.
அந்தமான் தமிழர் நமது வாழ்க்கைக்குத் தேவையற்ற மரபுகளை கட்டிப்பிடித்துக்கொண்டு தம்மை வருத்திக்கொள்வதில்லை. நல்லதுதானே? இயல்பான நீரோட்டம் போல தமது வாழ்க்கையை அனுபவித்து தானும் வாழ்ந்து பிறரையும் வாழவிடும் மேலான குணங்களுடன் இங்கு தமிழர் வாழ்கின்றனர். இந்தக்கட்டுரையை எனக்கு தெரிந்த வரையில் பதிவு செய்துள்ளேன். அந்தமான் தமிழ் நண்பர்கள் படிக்கும் போது எனது தவறுகளை சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். தவறுகள் அறிய வரும் போது கட்டுரை திருத்தப்படும்.
நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
தமிழர்களைப் பொறுத்தவரை வயதானதும் தங்கள் கடைசி காலத்தை தமிழகத்தில் கழிக்க விரும்பி மீண்டும் தமிழகம் திரும்புவதையே விரும்புகிறார்கள்.அந்தமானில் பல பண்பாடு, பழக்க, வழக்கங்கள் கொண்ட மக்கள் இருந்தாலும் தங்களது தாய்த்தமிழ் நாட்டின் பண்பாடு, பழக்கவழக்கங்களில் மாற்றமின்றி அவரவர் பின்பற்றுகின்றனர். தமிழர்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். இங்கு வெற்றிமலை முருகன் கோவில்,கணபதி,ஆஞ்சனேயர்,சமயபுர மாரியம்மன், பாகம்பிரியாள், முனீஸ்வரர்,காளி,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்று அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் வசதிக்கேற்ப கோவில்கள் அமைத்து, திருவிழாக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நிறையத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் தமது முன்னோர்களின் பூர்வீகம் தெரியாது.சொந்த ஊர் மறந்து, சாதி அறியாது, தமிழ் மொழி மறந்து இந்த மண்ணின் மைந்தர்களாக வாழும் தமிழர்களும் உண்டு. இங்குள்ள தமிழர்கள் சாதியின், இனத்தின் அடிப்படையில் பிரிந்து நிற்பதோ, சாதிகளைச்சொல்லி சண்டையிடுவதோ கிடையாது.இங்குள்ள தமிழர்களின் அடையாளம் தமிழ். இங்கு தமிழர்களிடையே ஏற்ற, தாழ்வு எண்ணங்களும் இல்லை.
உணவுப் பழக்கம் என்று எடுத்துக்கொண்டால் சப்பாத்தி, உருளைக்கிழங்கு கறி வட இந்தியர்களைப்போல பெரும்பான்மையான தமிழர்களின் அன்றாட உணவுப்பட்டியலில் உண்டு. இங்கு மீன் அதிகம் கிடைப்பதால் மீன் அதிகம் உட்கொள்கின்றனர்.உணவுப்பஞ்சம் இங்கு கிடையாது.இங்கு எந்தப் பொருளும் உற்பத்தி கிடையாது என்றாலும் கூட நமது தமிழ் வணிகப்பெருமக்கள் முக்கிய பூமியினின்று அனைத்துப் பொருட்களையும் தருவித்து மலையெனக்குவித்து விடுவார்கள்.மற்ற மாநில மக்களும் வசிப்பதால் அவரவர் சொந்த மாநிலங்களில் கிடைக்கும் பொருட்களையும் தருவிப்பதால் இங்கு காசைக்கொடுத்தால் கிடைக்காத பொருளே இல்லை எனலாம்.இங்கு தனிமனித வருமானம் ஒரளவு அதிகம் என்பதால் வறுமை மிகக் குறைவு.வந்தாரை வாழவைப்பது தமிழகத்தின் தன்மையென்றால் வந்தாரையெல்லாம் வளமுடன் வாழ வைப்பது இந்த அந்தமான் தீவு.உழைப்பாளிகளின் சொர்க்கபூமி இந்த ஸ்வர்ண பூமி.
எல்லோரும் தாய்த்தமிழ் நாட்டை விட்டு தொலைவில் இருப்பதால் எல்லா மக்களுடனும் மனித நேயத்துடன், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குறிப்பறிந்து உதவும் பண்பாடு அதிகம் உண்டு. பண உதவிகள், கடனுதவிகள் சுலபமாகப் பெறமுடியும். நாணயமற்ற செய்கைகளை தமிழர்கள் மன்னித்துவிடுவார்கள். ஆனால் அடுத்த முறை தலை கீழாக நின்றாலும் உதவி பெற முடியாது. ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் நம் தமிழகத்தில் இருந்து தாய் மாமன் வருவதற்குள் அந்தக் குழந்தை எத்தனை பேரை மாமா என்று அழைக்கிறதோ அத்தனை பேரும் மாமன் சீர் கொண்டு வருவார்கள். அண்டை மாநில நண்பர்கள் அவர்கள் பழக்கப்படி நம் குழந்தைகளை சீராட்டுவார்கள். இங்கு தமிழ் மக்களிடையே கலப்பு மணம், காதல் மணம் பரவலாகக் காணப்படுகிறது. சீர் வரிசைகள்,மணமக்களுக்கு திருமண சடங்குகள், மணமக்களுக்கு விருந்து உபசாரங்கள் எல்லாம் தமிழகத்தைப் போலவே இங்கும் உண்டு. ஆனால் திருமணத்தை அவரவர் விருப்பப்படி கோவிலிலோ,வீட்டிலோ முடித்துகொண்டு வரவேற்பு வைபவத்தை மண்டபத்தில் வைப்பர். சிலர் முக்கிய பூமியில் திருமணம் முடித்து இங்கு வந்து வரவேற்பு நடத்துவர். நம் ஊரைப்போல இங்கு வாழை இலை போட்டு விருந்து வைப்பதில்லை.ஒரு புலவு சாதம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மசாலா குழம்பு வகைகள் (சைவம்/அசைவம் அவரவர் வசதிப்படி) கீர் (அரிசி,பால்,சீனி,முந்திரி,திராட்சை கலந்து குழைய வேகவைத்து நம் ஊர் பாயாசம் போன்றது) வைத்திருப்பார்கள்.தட்டுகள் அடுக்கி இருக்கும்.மண்மக்கள் கைகளில் பரிசு அல்லது பண முடிப்பைக் கொடுத்துவிட்டு சாப்பாடு பரிமாறும் இடம் வந்து நாமே தட்டு எடுத்து வேண்டும் அளவு உணவு பெற்று உண்டு களிக்க வேண்டியது தான்(!) இங்கு கேள்விப்பட்ட அளவு வரதட்சணைக் கொடுமை கிடையாது.
சென்னையில் பேசுவது தமிங்கிலிஷ் என்றால் இங்கு பெரும்பாலான தமிழர்கள் தமிந்தி (தமிழோடு இந்தி கலந்து) பேசுவார்கள். சிலர் இந்தி மட்டுமே பேசுவதும் உண்டு. இதில் பெருமை அடையும் தமிழர்களும் உண்டு என்பது தான் தமிழ் பற்றுக் கொண்டோர்களின் வருத்தமும் கூட.அந்தமான் தமிழர் சங்கத்தில் எந்த விழாவாக இருந்தாலும் சரி,தமிழர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெறும் பெருமக்கள் வலியுறுத்துவது வீட்டில், தமிழர்களுடன் கலந்துரையாடும் போது தமிழில் அளவளாவுங்கள் என்பதைத்தான்.
பண்டிகைகள் என்று எடுத்துகொண்டால் நமது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளோடு வட இந்தியரின் துர்க்கா பூஜை (நவராத்ரி),ஹோலி பண்டிகை,ராக்கி(சகோதரர்களின் நலம் வேண்டி அவர்களின் கையில் ரட்சை கட்டுவது) ஆகியவற்றைக் கொண்டாடுகிறார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ் நாட்டின் அதே உவகையோடு கொண்டாடுவோம். இங்கு வயல் வரப்பு, தோட்டம் துரவு, மாடு,கன்று,ஆடு,கோழி வளர்க்கும் தமிழ் விவசாயக்குடும்பங்கள் நிறைய உண்டு. அவர்கள் மாட்டுப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவர். நண்பர்களுக்கும் அழைப்பு உண்டு.தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா கொண்டாடுவோம். முக்கிய பூமியினின்று பேச்சாளர் பெருமக்களை அழைத்து வந்து விழாவிற்கு சிறப்பு சேர்ப்பர் சங்க நிர்வாகிகள்.
உடை அலங்காரத்தைப் பொறுத்தவரை பெண்கள் பெரும்பாலும் தமிழகத்தைப்போலவே சேலை,சுடிதார்,சல்வார் தான். மிகச்சிலர் மேனாட்டு உடைகள் அணிவதுண்டு. பெரும்பாலும் விமர்சிப்பது கிடையாது. இங்கு தமிழ்ப் பெண்கள் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர். நல்ல ஆடை அலங்காரத்தை விரும்புகின்றனர். பல வகை மக்களுடன் வசிப்பதால் அடுத்தவர்களிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்களை,உணவு முதல் நடை, உடை, பாவனை,இசை, வீட்டுப்பராமரிப்பு,குழந்தை வளர்ப்பு வரை சுலபமாக எடுத்துக்கொள்கின்றனர்.
அந்தமான் தமிழர் நமது வாழ்க்கைக்குத் தேவையற்ற மரபுகளை கட்டிப்பிடித்துக்கொண்டு தம்மை வருத்திக்கொள்வதில்லை. நல்லதுதானே? இயல்பான நீரோட்டம் போல தமது வாழ்க்கையை அனுபவித்து தானும் வாழ்ந்து பிறரையும் வாழவிடும் மேலான குணங்களுடன் இங்கு தமிழர் வாழ்கின்றனர். இந்தக்கட்டுரையை எனக்கு தெரிந்த வரையில் பதிவு செய்துள்ளேன். அந்தமான் தமிழ் நண்பர்கள் படிக்கும் போது எனது தவறுகளை சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். தவறுகள் அறிய வரும் போது கட்டுரை திருத்தப்படும்.
நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
தமிழர் பண்பாடு
தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.
"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்கங்களைக் கொண்டதாகும். ஒன்று: அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." [1]
பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறைப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டாது, மாற்றாக சைவ சமயத்துக்கு தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு
தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.
"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்கங்களைக் கொண்டதாகும். ஒன்று: அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." [1]
பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறைப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டாது, மாற்றாக சைவ சமயத்துக்கு தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு
திங்கள், 11 ஜனவரி, 2010
என் இதயம்
தோழியே எனக்குள் நீ
உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்...................
மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு......................
கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள்
தண்டனை காதல்........................
ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...............
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள் என் இதயம்.................
உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்...................
மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு......................
கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள்
தண்டனை காதல்........................
ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...............
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள் என் இதயம்.................
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)