என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

சிலி பூகம்ப பலி 700-ஐ தாண்டியது


சாண்டியாகோ மார்ச்.1 (டிஎன்எஸ்) தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று முன்தினம் 8.8 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் சான்டியாகோ மற்றும் கன்செப்ஷன் உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதில் ஏராளமானபேர் பலியாகினர்.


இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் மிச்செல் பெக்லட் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலநடுக்கத்தால் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பலியானவர்கள் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என்றார்.

நில நடுக்கம் அளவு ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்தன. இதன் மையம் கடலுக்கு அருகே இருந்தது. எனவே பசிபிக் கடல் பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலை கள் எழுந்து வந்து இந்த தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 13 பேரை காணவில்லை. சிலி நாட்டில் உள்ள துறை முக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதம் அடைந்தன. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கி அதை தாண்டி வேகமாக சென்றது.

எனவே அமெரிக்காவின் ஹவாய் தீவு, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷியாவின் கிழக்கு பகுதி உள்பட பசிபிக் கடல் பகுதியில் உள்ள 53 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

பூகம்பம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து ஹவாய் தீவில் நேற்று (பிப்.28) சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை தாண்டி வந்தன. ஆனால் முன் எச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பிரான்சு நாட்டுக்கு சொந்தமான போலினிசா தீவிவிலும் சுனாமி தாக்கியது.  (டிஎன்எஸ்)