யரோடு யாரை ஒப்பிட்டாலும் வள்ளென்று விழுந்து வைக்கும் விவிஐபிகள் கூட ஒரு விஷயத்தில் உற்சாகம் ஆகிவிடுவார்கள்.அது? உங்களை விட உங்க வாரிசு பின்னி எடுக்குதே என்று பாராட்டுகிற போது! அப்படி ஒரு உற்சாகத்தைதான் பார்க்க முடிந்தது ஏ.ஆர்.ரஹைனாவிடம்.
சனி, 17 ஏப்ரல், 2010
ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???
சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார். விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர்,
எரிமலைப் புகை : விமானசேவைகள் தொடர்பாதிப்பு
ஐஸ்லாந்தின் எய்யப்யாலயேகோட்ல (Eyjafjallajökull) என்ற எரிமலை ஒரு மாதத்திற்குள் தற்போது இரண்டாவது தடவையாக வெடித்திருப்பது பல வட ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்தை நிறுத்த வைத்துள்ளது. எரிமலை கக்குகின்ற சாம்பல் காற்று மண்டலத்தில் தூசுப் புகையாகப் பரவியுள்ளது. இந்தப் புகை மேகம் பறக்கும் விமானங்களின் இயந்திரத்தைப் பழுதாக்கிவிடும்,
வியாழன், 15 ஏப்ரல், 2010
பையா (விமர்சனம்)
பாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது. காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்!
ப்ரீத்தி ஜிந்தாவுடன் அவுஸ்திரேலிய நட்சத்திரம் பிரட் லீ காதல்?
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.
கொல்கத்தா அணி மீது ஷாருக்கான் அதிருப்தி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று மிகவும் மோசமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது. அந்த அணி 7-வது தோல்வியை சந்தித்து உள்ளது. 10 புள்ளியுடன் உள்ளது.இந்த தோல்வி மூலம் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்துவிடும் அபாயத்தில் உள்ளது.
இனி வரும் ஆட்டங்களில் அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (17-ந்தேதி), மும்பை இந்தியன்ஸ் (19-ந் தேதி) ஆகியவற்றுடன் மோத வேண்டி உள்ளது.
சீனாவில் நில நடுக்கம் : 300 பேர் பலி,8000 பேர் காயம்
சீனாவின் வடமேற்கு மாகாணமான கியுங்காய் பகுதியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். 8000 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீன நேரப்படி இன்று காலை 7.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
சானியா - சோய்ப் திருமணம் இன்று நடைபெற்றது
இரு முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்தான சானியா மிர்ஸா சோயப் மாலிக் திருமணம் இன்று திடீரென நடத்தி முடித்து வைக்கப்பட்டு விட்டது.இருவருக்கும் ஏப்ரல் 15ம் தேதிதான் திருமணம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இடையில் இரண்டு முறை முன்கூட்டியே திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்
தாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்ப டும் முதலாவது புதுவருடம் இதுவாகும்.
இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எனது நம் பிக்கையாகும். சிங்களவர்களாலும் தமிழர் களாலும் ஒரே வகையில் கொண்டாடப்படும்
வன்முறைகளை தடுக்க நாடளாவிய ஏற்பாடு
தேர்தலுக்குப் பின்னரான வன் முறைகளை தடுப்பதற்கு நாடளா விய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரி ஷாந்த ஜயகொடி தெரிவித்தார். தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகள் தொடர்ந்தும் ஏழு தின ங்களுக்கு
சனி, 10 ஏப்ரல், 2010
ரஜினி - கமல் படங்களை பார்த்து வளர்ந்தேன் : விவேக் ஒபராய்
பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடித்த “பிரின்ஸ்” என்ற இந்தி படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. இதையொட்டி விவேக் ஒபராய் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று திருச்சி வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை
பிரவுசர்களில் மாற்றம் வேண்டும் என விரும்புபவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்வது பயர்பாக்ஸ் பிரவுசராகும். அவ்வப்போது இதனைத் தயாரித்து வழங்கும் மொஸில்லா நிறுவனம், இந்த பிரவுசருக்கான அப்டேட் பைல்கள் மூலம் பல கூடுதல் வசதிகளைத் தந்து வருவது இதன் ஒரு சிறப்பாகும்.இதில் அண்மையில் ஒரு நல்ல வசதியைக் காண நேர்ந்தது.பல இணைய தளங்களை அடுத்தடுத்து திறந்து பார்க்கையில்,
சிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்!
நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் பிடிப்பவர்கள் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது என்றும், மேலும் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களின் தாம்பத்திய உறவு சிக்கலாகும் என்றும் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.சென்னையில் உள்ள ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வரும் 16, 17 தேதிகளில்
திங்கள், 5 ஏப்ரல், 2010
மக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக நித்தியானந்தாவின் வீடியோவை வெளியிட்டேன்: லெனின்கருப்பன்
நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன் என்று லெனின் கருப்பன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு எதிராக 2வது புதிய இராணுவ நீதிமன்றம்
ஜனாதிபதியினால் நியமனம்; இரு நீதிமன்றங்களின் அமர்வுகள் நாளை
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தை புதிதாக நியமித்துள்ளார். இந்த நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எம். பி. மீரிஸ¤ம், உறுப்பினர்களாக
ஆதரவு திரட்ட கட்சிகள் இறுதிநேர பிரயத்தனம்
தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு:
மித்தெனியவில் ஐ. ம. சு. முவின் இறுதிக் கூட்டம்
ஸ்ரிக்கர் ஒட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இறுதிக்கட்ட தேர்தல்பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
சனி, 3 ஏப்ரல், 2010
பெற்றோருக்கு உதவும் வகையில் பம்பைமடுவில் விசேட கருமபீடம்
1365 பேர் ஒப்படைப்பு
புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து கடந்த முதலாம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1365 பேரினதும் பெற்றோர் மற்றம் உறவினர்களுக்கு உதவும் வகையில் வவுனியா பம்பைமடுவில் இன்றும் நாளையும் விசேடமாக இரண்டு கருமபீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
பொலித்தீன் கொடிகள் 17,000 கிலோ, கட்அவுட் 3600 நேற்றுவரை அகற்றல்
4ம், 5ம் திகதிகளில் பொலிஸ் நடவடிக்கை தீவிரமாகும்
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட நாள்முதல் வேட்பாளர்கள், ஆதரவாளர்களினால் போடப்பட்ட வர்ண பொலித்தீன் கொடிகள் இன்றுவரை சுமார் 16,754 கிலோ மற்றும் 3603 கட்அவுட்டுகள், 824 பெனர்கள் பெருந்தொகையான போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் அரையிறுதிக் கனவு.....???
நேற்றிரவு மொகாலியில் நடந்த 31ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப வீரர் ஷான் மார்ஷ் 2, அணித்தலைவர் சங்கக்கரா 45, யுவராஜ்சிங் 36, ரவி பொபரா 42, இர்பான் பதான்16, ஓட்டங்களைப் பெற்றனர். இதன் படி நிர்ண்யிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி181 ஓட்டங்களைப்பெற்றது.
தீக்குளித்த தொண்டருக்கு நேரில் ஜெயலலிதாவும் வைகோவும் ஆறுதல்
பென்னாகரம் தேர்தலில் அதிமுக தோற்றதால் ஈரோடில் தீக்குளித்த தொண்டரை ஜெயலலிதாவும், வைகோவும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.ஈரோடு கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் தங்கவேல் (வயது 55). டி.வி.யில் தேர்தல் முடிவை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
தியான பீடத்தில் இருந்து விலகிய நித்யானந்தா இமயமலையில் பதுங்கல்?
தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளில் தியான பீடம் நடத்தி வந்தவர் நித்யானந்தா.
நெடுஞ்சாலை பெயர்ப் பலகைகளில் இருந்து மன்மோகன்சிங், சோனியா படம் நீக்கம்
தேசிய நெடுஞ்சாலை பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது படங்களை நீக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) முடிவு செய்துள்ளது பெயர்ப்பலகைகளில் பிரதமர், சோனியா படம் இருப்பதற்கு பிரதமர் அலுவலகத்தில்
பெரிய வெள்ளி : தங்களைத் தாங்களே துன்புறுத்தும் பிலிப்பைன்ஸ் பக்தர்கள்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் மரித்த இயேசு பிரானின் மரணத்தையும் அவரது உயிர்த்தெழுதலையும் நினைவுகூறும் முகமாக இன்று பிலிப்பைன்ஸ் சன் ஜூன் பிகான் கிராமத்தில் மக்கள் சிலுவை சுமந்து ஆணி அறைந்து தங்களைத் தாங்களே வருத்தி இன்றைய புனித நாளை நினைவு கூறுகின்றனர்.(பட இணைப்பு)
மோசடி மந்திரவாதி பிரிட்டனில் கைது : 18 மாத சிறை
பிரிட்டனில் வசிக்கும் மந்திரவாதி, பல்வேறு குறைகளை தீர்ப்பதாக கூறி பக்தர்களிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின் செஷயர் பகுதியை சேர்ந்தவர் நீம் முகமது. குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தி தருவது முதல், காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருவது வரை, எல்லாம் மந்திரத்தால் சாதிக்க முடியும், என கூறி பத்திரிகைகளில் ஏராளமான விளம்பரம் கொடுத்து வந்தார்.
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
புனர்வாழ்வளிக்கப்பட்ட 1365 பேர் நேற்று ஜனாதிபதியினால் பெற்றோரிடம் ஒப்படைப்பு
புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 1365 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட னர். இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றதாக அதற்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
‘பயங்கரவாதம் போன்று நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது விகிதாசார தேர்தல்முறை
பயங்கரவாதம் போன்று நாட்டிற்கு பெரும் பிரச்சினையாகவுள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தாருங்கள் என அமைச்சர் டலஸ் அழகப் பெரும நாட்டு மக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.
இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பாரிய அசௌகரியங்கள்
இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், தற்போதைய நிலைமையை மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது எனவும், இந்தோனேசிய அரசாங்கம் உறுதியான உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில், படகில் இருந்த தாம் இறங்கத் தயாரெனவும் அகதிகளின் புதிய பேச்சாளர் நிமல் தெரிவித்துள்ளார்.
யாழ். ஐ.ம.சு.மு பிரசார கூட்டத்தில் மக்கள் திரள்
நல்லூர்கந்தசுவாமி கோயிலில் ஜனாதிபதி வழிபாடு நூலகத்தையும் பார்வையிட்டார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் : அரசுக்கு கூட்டமைப்பு பதிலடி
இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற அரசின் கருத்துக்குக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பதிலடி கொடுத்துள்ளார்.பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் இனவாதம் பேசும் தமிழ்
தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் விரைவில் மீளப் பெற்றுக் கொடுப்போம்:யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
o வடக்கை வளமாக்கும் திட்டம்
o மகாவலி கங்கை வடக்கிற்கு திரும்பும்
oஆசியாவில் உன்னத நாடாக இலங்கையை கட்டியெழுப்ப பங்காளராகுங்கள்
தமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.(படஇணைப்பு)
தமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.(படஇணைப்பு)
வியாழன், 1 ஏப்ரல், 2010
பிரிட்டிஷ் அமைச்சரின் அறிக்கையை அடுத்து பிரிட்டன் செயற்பாடுகளில் இலங்கை சந்தேகம்
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இவ்வேளையில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கை பற்றி விசேட அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளதால் பிரிட்டனின் செயற்பாடு குறித்து இலங்கைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளின் பட்டியல் (25 போட்டிகளின் முடிவுகள்)
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் 25 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அணிகளின் தரப்படுத்தும் விபரங்கள்!
ஐ.பி.எல் போட்டிகளின் பட்டியல் (25 போட்டிகளின் முடிவுகள்)
ஐ.பி.எல் போட்டிகளின் பட்டியல் (25 போட்டிகளின் முடிவுகள்)
மொஸ்கோ தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு செச்னிய கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரியுள்ளது
ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு செச்னிய கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது இந்தத் தாக்குதலை தமது அமைப்பே மேற்கொண்டதாக, செச்னிய கிளர்ச்சி அமைப்பின் தலைவர் டொக்கு உமாரோவ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
4 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியாவினால் கையளிப்பு
வடக்கின் மீள் கட்டுமானப் பணிகள்
வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கென இந்திய அரசு 200 மில் லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சம் சீமெந்து மூடைகளை நேற்று கையளித்தது.
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த், தேச நிர்மான, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செய லாளர் டபிள்யூ.
16,800 மெற்றிக் தொன் நெல் ஒரு மாதத்தில் அரசு கொள்வனவு
நாளாந்தம் 50 மெ.தொ. கொள்வனவுக்கும் திட்டம்
இம்முறை பெரும் போகத்தின்போது 2.5 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் அனைத்து நெல் உற்பத்தியையும் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது வரை 16, 800 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு
வவுனியா மன்னார்வீதியில் வாகன விபத்து - கோயில்குளத்தில்விழுந்து தற்கொலை செய்த மாணவி
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்றுகாலை 7.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது வயது நிரம்பிய பாடசாலை மாணவியொருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன், இன்னொரு மாணவியான 17வயதுடையவர் கையில் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. பிரேக் இல்லாத நிலையில் அப்பகுதியில்
ஸ்ரீலசுக பிரசாரக் கூட்டத்தில் இசைக்கச்சேரி நடத்திய குழு விபத்தில் சிக்கி மூவர் பலி!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் எஸ்.பி. திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இசைக் கச்சேரி நடத்திய குழுவினர் சென்ற வாகனம் ரயிலில் மோதுண்டதில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை, கிரிபத்கும்புர பகுதியில் சிவப்பு சமிக்ஞையையும் தாண்டிச் செல்ல முற்பட்ட வேளை இவ்விபத்து
சிறுவர் போராளிகள், அங்கவீனர்கள்;1300 பேர் இன்று உறவினரிடம் ஒப்படைப்பு!
புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர்களடங்கிய சுமார் 1300 பேர் இன்று முதலாம் திகதி விடுவிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவிருப்பதாக
புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)