என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 18 நவம்பர், 2010

ஜனாதிபதியின் பிறந்த தினம்; நாடு முழுவதும் வைபவங்கள் பதவியேற்பு நிகழ்வுக்கு விசேட ஏற்பாடுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டியும் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் மத வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையொட்டி உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தவிரவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

திங்கள், 11 அக்டோபர், 2010

இணையச் சமூக வலையமைப்பாமே.. ஏதாவது விளங்கிச்சா உங்களுக்கு?

இணையம் என்றால் Internet என்று எமக்குத்தெரியும். இந்தச் "சமூக வலையமைப்பு' (Social Networking) என்ற சொல்தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கு இல்லையா?
இந்தப் படத்தைப் பாருங்கள். கொஞ்சப்பேர் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒருத்தருக்கு மற்றவர் நண்பர், இன்னொருவர் காதலர், மற்றுமொருவர் உறவினர் என்றவாறு தொடர்புகள்.

சனி, 2 அக்டோபர், 2010

பேஸ்புக் - ஸ்கைப் இணையும் புதிய தகவல் சேவை

சமூகவலைப் பின்னல் தளமான பேஸ்புக் மற்றும் இணையத் தொலைபேசிச் சேவையான ஸ்கைப் ஆகியவை இணைந்து செயற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைந்த தகவல்

கடன் அட்டை மோசடி மன்னரான இலங்கையர் பிரிட்டனில் கைது!

கடன் அட்டை மோசடி மன்னர்களில் ஒருவரான இலங்கைத் தமிழ் இளைஞன் (வயது-30) ஒருவர் பிரித்தானியாவில் இண்டர்போல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வேயில் கடந்த இரு வருடங்களாக இடம்பெற்று வந்த ஏராளமான கடன் அட்டை மோசடிகளின்

வியாழன், 16 செப்டம்பர், 2010

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
சிறந்த படம் : குட்டி ஷ்ரங் (மம்முட்டி நடித்த மலையாள படம்). இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், படத்தின் டைரக்டர் ஷாஜி என்.கருணுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும்

மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் பயன்படுத்துவதால் சாதகமான மருத்துவ பயன் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சி வெளிவந்துள்ளது. டீன்ஏஜ் மனஅழுத்த நோயாளிகள், இன்டர்நெட் பார்ப்பதால் குணமாகலாம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இன்டர்நெட் செல்ப் ஹெல்ப் பார் டெப்ரஷன்என்ற தலைப்பில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய பேராசிரியர் சுவனா சேத்தி ஆய்வு நடத்தினார்.
மனஅழுத்தம் கொண்ட டீன்ஏஜ் வயதினரை தேர்வு செய்து, இன்டர்நெட்டில் மனநலம் குறித்த தகவல் பரிமாற்ற இணைய தளங்களை பார்த்து வர செய்தார்.

புதன், 15 செப்டம்பர், 2010

50 அடி உயரத்தில் நின்று போராட்டம் நடத்தியவர் 18 மணி நேரத்தின் பின்னர் கீழே இறக்கப்பட்டார் .

அரசாங்கத்தினால் நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக கூறி சுமார் 50 அடி உயர கம்பத்தில் ஏறி இருந்து புதுவிதமான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய நபர் 18 மணிநேரத்தின் பின்னர் மிகவும் பாதுகாப்பான முறையில் கீழே இறக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு 18 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரும்

திங்கள், 13 செப்டம்பர், 2010

பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய.........

நம்மில் பலர்பேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம், இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும்.
பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது

வியாழன், 9 செப்டம்பர், 2010

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம்.

குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும்.

புதன், 8 செப்டம்பர், 2010

பிரபல திரைப்பட நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட நடிகர் முரளி இன்று காலை சென்னையில் காலமானார். தமிழ்ப்படங்களில் நாயகனாக நடித்து வந்த முரளி (வயது 47), மாரடைப்புக் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது. பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி.

திங்கள், 6 செப்டம்பர், 2010

Facebook Profile Tab இல் இணைப்பது எவ்வாறு?

இன்றைய சிந்தனையை இதுவரை Facebook Profile Tab இல் இணைக்காதவர்கள் இணைக்கும் முறை:

  1. http://apps.facebook.com/thoughtsoftheday/ இற்குச் செல்லவும்.
  2. Add Profile Tab பொத்தானை அழுத்தவும்.
  3. காட்சியளிக்கும் Dialog Box இலுள்ள Add Profile Tab பொத்தானை மீண்டும் அழுத்தவும்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

உணவத்தின் வேலை செய்த பெண் மீது பலத்த அடி (வீடியோ இணைப்பு)

கனடாவில் இன்று சிக்கன் நட்ஸ் தராத காரணத்தினால் காரில் இருந்து இறங்கி உணவகத்தில் வேலை செய்த பெண் மீது பலத்த அடி கொடுத்த பெண் ஒருவர் கண்ணாடியையும் உடைத்துட்டு சென்றுள்ளார்.

இதுதான் உலகம்....

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தமிழ் சோகப் பாடல்களின் வரிகள் சில.............


எங்கே எனது கவிதை....

படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள் - வைமுத்து

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை 
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அப்புறம் இவர்தான்- ஓர் அலசல்


இன்றைய தேதியில்அதிகமான சினிமா பார்க்கும் மக்கள் பயன்படுத்தப்படும் சினிமா வசனங்கள் வடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனமாகவே இருக்கிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் பின்னர் ரஜினி பட வசனங்களையும் (பஞ்ச்) அதிகமானவர்கள் பேச்சுக்களுக்கு நடுவே சாதரணாமாக உபயோகப்படுத்தி வந்தனர்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம்

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோசெப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் மற்றும் முதலீட்டாளர் வொரன் புபே ஆகியோரினால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளவயது - நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான்.

வேளாங்கண்ணியில் அதிசயம் ! தோண்ட தோண்ட சிலைகள்

வேளாங்கண்ணியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 13 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.தோண்ட தோண்ட சிலைகள் நாகை மாவட்டம்

வியாழன், 29 ஜூலை, 2010

கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?
ஆம்,கையடக்கஇல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும்

சனி, 17 ஜூலை, 2010

ஹாலிவுட் நடிகை மீது மோகம் கொண்டுள்ள உமர் பின்லேடன்

அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் உயிருடன் இருப்பதாக அவனது மகன் உமர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கு மூளையாக செயல்பட்டவன் பின்லேடன்.
அவன் உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அமெரிக்க படைகள் இதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அல்கய்தா செயல்படும் இடங்களில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் பின்லேடனின் முதல் மனைவி மூலம் பிறந்த உமர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.

சனி, 19 ஜூன், 2010

ரஜினிதான் மாஸ்... அவரேதான் பாஸ்! : ஷங்கர் பேட்டி

திரையுலகில் ரஜினியை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ், என்கிறார் இயகத்குநர் ஷங்கர்.இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி: 
எந்திரன் 3D படமா? 

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு ஆப்பு!

ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து முதல் பாகம், இரண்டாம் பாகம் என பல பாகங்களை ஒளிபரப்புவதை விஜய் டிவி தனது கொள்கையாகவே வைத்திருக்கிறது.

நடிகை பரபரப்பு புகார்; நண்பர்களுக்கு என்னை விருந்தாக்க முயன்றார் கணவர்!

சமீபத்தில் வெளியான பட்டுவண்ணரோசாவாம் படத்தில் நடித்த நடிகை இந்திரா, கணவர் சதீஷ்குமர்,அவரது நண்பர்களுக்கு தன்னை செக்ஸ் விருந்தளிக்க வற்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். 

வெள்ளி, 21 மே, 2010

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?


NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

  1. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  2. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

சனி, 17 ஏப்ரல், 2010

ஏ.ஆர்.ரஹைனா பெருமிதம்!

யரோடு யாரை ஒப்பிட்டாலும் வள்ளென்று விழுந்து வைக்கும் விவிஐபிகள் கூட ஒரு விஷயத்தில் உற்சாகம் ஆகிவிடுவார்கள்.அது? உங்களை விட உங்க வாரிசு பின்னி எடுக்குதே என்று பாராட்டுகிற போது! அப்படி ஒரு உற்சாகத்தைதான் பார்க்க முடிந்தது ஏ.ஆர்.ரஹைனாவிடம்.

ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???

சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார். விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர்,

எரிமலைப் புகை : விமானசேவைகள் தொடர்பாதிப்பு

ஐஸ்லாந்தின் எய்யப்யாலயேகோட்ல (Eyjafjallajökull) என்ற எரிமலை ஒரு மாதத்திற்குள் தற்போது இரண்டாவது தடவையாக வெடித்திருப்பது பல வட ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்தை நிறுத்த வைத்துள்ளது. எரிமலை கக்குகின்ற சாம்பல் காற்று மண்டலத்தில் தூசுப் புகையாகப் பரவியுள்ளது. இந்தப் புகை மேகம் பறக்கும் விமானங்களின் இயந்திரத்தைப் பழுதாக்கிவிடும்,

வியாழன், 15 ஏப்ரல், 2010

பையா (விமர்சனம்)

பாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது. காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்!

ப்ரீத்தி ஜிந்தாவுடன் அவுஸ்திரேலிய நட்சத்திரம் பிரட் லீ காதல்?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

கொல்கத்தா அணி மீது ஷாருக்கான் அதிருப்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று மிகவும் மோசமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது. அந்த அணி 7-வது தோல்வியை சந்தித்து உள்ளது. 10 புள்ளியுடன் உள்ளது.இந்த தோல்வி மூலம் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்துவிடும் அபாயத்தில் உள்ளது.
இனி வரும் ஆட்டங்களில் அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (17-ந்தேதி), மும்பை இந்தியன்ஸ் (19-ந் தேதி) ஆகியவற்றுடன் மோத வேண்டி உள்ளது.

சீனாவில் நில நடுக்கம் : 300 பேர் பலி,8000 பேர் காயம்

சீனாவி‌ன் வடமேற்கு மாகாணமான கியுங்காய் பகுதியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். 8000 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீன நேரப்படி இன்று காலை 7.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

சானியா - சோய்ப் திருமணம் இன்று நடைபெற்றது

இரு முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்தான சானியா மிர்ஸா சோயப் மாலிக் திருமணம் இன்று திடீரென நடத்தி முடித்து வைக்கப்பட்டு விட்டது.இருவருக்கும் ஏப்ரல் 15ம் தேதிதான் திருமணம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இடையில் இரண்டு முறை முன்கூட்டியே திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்

தாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்ப டும் முதலாவது புதுவருடம் இதுவாகும்.
இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எனது நம் பிக்கையாகும். சிங்களவர்களாலும் தமிழர் களாலும் ஒரே வகையில் கொண்டாடப்படும்

வன்முறைகளை தடுக்க நாடளாவிய ஏற்பாடு

தேர்தலுக்குப் பின்னரான வன் முறைகளை தடுப்பதற்கு நாடளா விய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரி ஷாந்த ஜயகொடி தெரிவித்தார். தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகள் தொடர்ந்தும் ஏழு தின ங்களுக்கு

சனி, 10 ஏப்ரல், 2010

ரஜினி - கமல் படங்களை பார்த்து வளர்ந்தேன் : விவேக் ஒபராய்

பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடித்த பிரின்ஸ்என்ற இந்தி படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. இதையொட்டி விவேக் ஒபராய் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று திருச்சி வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை

பிரவுசர்களில் மாற்றம் வேண்டும் என விரும்புபவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்வது பயர்பாக்ஸ் பிரவுசராகும். அவ்வப்போது இதனைத் தயாரித்து வழங்கும் மொஸில்லா நிறுவனம், இந்த பிரவுசருக்கான அப்டேட் பைல்கள் மூலம் பல கூடுதல் வசதிகளைத் தந்து வருவது இதன் ஒரு சிறப்பாகும்.இதில் அண்மையில் ஒரு நல்ல வசதியைக் காண நேர்ந்தது.பல இணைய தளங்களை அடுத்தடுத்து திறந்து பார்க்கையில்,

சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்!

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஆகா‌ஷ் கரு வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் வரு‌ம் 16, 17 தே‌திக‌ளி‌ல்

திங்கள், 5 ஏப்ரல், 2010

மக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக நித்தியானந்தாவின் வீடியோவை வெளியிட்டேன்: லெனின்கருப்பன்

நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன் என்று லெனின் கருப்பன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

பொன்சேகாவுக்கு எதிராக 2வது புதிய இராணுவ நீதிமன்றம்

ஜனாதிபதியினால் நியமனம்இரு நீதிமன்றங்களின் அமர்வுகள் நாளை
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தை புதிதாக நியமித்துள்ளார். இந்த நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எம். பி. மீரிஸ¤ம், உறுப்பினர்களாக

ஆதரவு திரட்ட கட்சிகள் இறுதிநேர பிரயத்தனம்

தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு:

மித்தெனியவில் ஐ. ம. சு. முவின் இறுதிக் கூட்டம்

ஸ்ரிக்கர் ஒட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இறுதிக்கட்ட தேர்தல்பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

சனி, 3 ஏப்ரல், 2010

பெற்றோருக்கு உதவும் வகையில் பம்பைமடுவில் விசேட கருமபீடம்

1365 பேர் ஒப்படைப்பு 
புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து கடந்த முதலாம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1365 பேரினதும் பெற்றோர் மற்றம் உறவினர்களுக்கு உதவும் வகையில் வவுனியா பம்பைமடுவில் இன்றும் நாளையும் விசேடமாக இரண்டு கருமபீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

பொலித்தீன் கொடிகள் 17,000 கிலோ, கட்அவுட் 3600 நேற்றுவரை அகற்றல்

4ம், 5ம் திகதிகளில் பொலிஸ் நடவடிக்கை தீவிரமாகும்
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட நாள்முதல் வேட்பாளர்கள், ஆதரவாளர்களினால் போடப்பட்ட வர்ண பொலித்தீன் கொடிகள் இன்றுவரை சுமார் 16,754 கிலோ மற்றும் 3603 கட்அவுட்டுகள், 824 பெனர்கள் பெருந்தொகையான போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் அரையிறுதிக் கனவு.....???

நேற்றிரவு மொகாலியில் நடந்த 31ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப வீரர் ஷான் மார்ஷ் 2, அணித்தலைவர் சங்கக்கரா 45, யுவராஜ்சிங் 36, ரவி பொபரா 42, இர்பான் பதான்16, ஓட்டங்களைப் பெற்றனர். இதன் படி நிர்ண்யிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி181 ஓட்டங்களைப்பெற்றது.

தீக்குளித்த தொண்டருக்கு நேரில் ஜெயலலிதாவும் வைகோவும் ஆறுதல்

பென்னாகரம் தேர்தலில் அதிமுக தோற்றதால் ஈரோடில் தீக்குளித்த தொண்டரை ஜெயலலிதாவும், வைகோவும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.ஈரோடு கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் தங்கவேல் (வயது 55). டி.வி.யில் தேர்தல் முடிவை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

தியான பீடத்தில் இருந்து விலகிய நித்யானந்தா இமயமலையில் பதுங்கல்?

தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளில் தியான பீடம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. 

நெடுஞ்சாலை பெயர்ப் பலகைகளில் இருந்து மன்மோகன்சிங், சோனியா படம் நீக்கம்

தேசிய நெடுஞ்சாலை பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது படங்களை நீக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) முடிவு செய்துள்ளது பெயர்ப்பலகைகளில் பிரதமர், சோனியா படம் இருப்பதற்கு பிரதமர் அலுவலகத்தில்

பெரிய வெள்ளி : தங்களைத் தாங்களே துன்புறுத்தும் பிலிப்பைன்ஸ் பக்தர்கள்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் மரித்த இயேசு பிரானின் மரணத்தையும் அவரது உயிர்த்தெழுதலையும் நினைவுகூறும் முகமாக இன்று பிலிப்பைன்ஸ் சன் ஜூன் பிகான் கிராமத்தில் மக்கள் சிலுவை சுமந்து ஆணி அறைந்து தங்களைத் தாங்களே வருத்தி இன்றைய புனித நாளை நினைவு கூறுகின்றனர்.(பட இணைப்பு)

மோசடி மந்திரவாதி பிரிட்டனில் கைது : 18 மாத சிறை

பிரிட்டனில் வசிக்கும் மந்திரவாதி, பல்வேறு குறைகளை தீர்ப்பதாக கூறி பக்தர்களிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின் செஷயர் பகுதியை சேர்ந்தவர் நீம் முகமது. குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தி தருவது முதல், காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருவது வரை, எல்லாம் மந்திரத்தால் சாதிக்க முடியும், என கூறி பத்திரிகைகளில் ஏராளமான விளம்பரம் கொடுத்து வந்தார்.