மகா சிவராத்திரி தினமான நாளை சனிக்கிழமை பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் இந்தியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.காலை 5மணிக்கு ஆரம்பமாகும் சிவராத்திரி சிறப்புப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அபிஷேக,கும்ப பூஜைகள் நடைபெறும். மறுநாள் காலை 5.30மணிக்கு வசந்தமண்டப அலங்காரப் பூஜை நடைபெற்று கேதீஸ்வரநாதர் கௌரி அம்பாள் சமேதராக பாலாவி தீர்த்தக்கரைக்கு உலா வருவார்.
இவர்களுடன் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் இந்தியாவிலிருந்து வருகைதரும் தேவார இசை மணி திருமதி விஜய லஷ்மிராஜராம், தமிழ் இசைத் தென்றல் திருமதி மீனாட்சி ஸ்ரீநிவாசன் ஆகியோரின் திருமுறைப் பக்திப் பாடல்களும் நடைபெறவுள்ளன என அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.